(க.கிஷாந்தன்)
கேகாலை - தெரணியாகல - மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 11 வயதான டில்மினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்தச் சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல் கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த சிறுமி நேற்றையதினம், அறையின் கதவுகளை அடைத்து, தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மிக நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து, சிறுமியின் சகோதரர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளனர்.
சிறுமியிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காததையடுத்து, சகோதரர்கள் தாயிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைனையடுத்து, தாய் வீட்டின் ஜன்னல் ஊடாக பார்த்தபோது, சிறுமி தொட்டில் புடவையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர், சிறுமியின் சகோதரனை ஜன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி, கதவை திறந்து, சிறுமியை தெரணியாகல வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். எனினும், குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment