முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் : அமைச்­ச­ரவை பின்­வாங்­குமா? - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் : அமைச்­ச­ரவை பின்­வாங்­குமா?

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டச் (MMDA) சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக ஊடக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 

சட்ட ரீதி­யான திரு­ம­ணங்­க­ளுக்­கான வய­தெல்­லையை 18 வரு­டங்­க­ளாக உயர்த்­துதல், திரு­மணப் பதிவு ஆவ­ணத்தில் மணப்பெண் கையெ­ழுத்­தி­டு­வதை கட்­டா­ய­மாக்­குதல், பல­தார திரு­ம­ணங்­களை இல்­லா­தொ­ழித்தல் மற்றும் காதி நீதி­மன்ற முறை­மையை அகற்­றுதல் ஆகிய விட­யங்கள் இச்­சீர்­தி­ருத்­தங்­களின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கடந்த 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை ஐந்­திற்கும் குறை­வில்­லாத குழுக்கள் முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்­தினை சீர்­தி­ருத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. இம்­முறை, அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது ஒற்றை அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது. எனினும், இக்­கு­ழுவில் உள்ள சில ஆண்­களும் பெண்­களால் கோரப்­படும் இந்த சீர்­தி­ருத்­தங்­களை தடுப்­ப­தற்­காக நேர்­மை­யற்ற முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தாகத் தெரி­கின்­றது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையில் (ACJU) உள்ளோர் தமது வழ­மை­யான நகர்வுகளை ஆரம்­பித்­துள்­ளனர். மேற்­கு­றித்த தீர்­மா­னங்­க­ளுக்கு முன்னர், திரு­ம­ணத்­துக்­கான பெண்­களின் அதி­கு­றைந்த வய­தெல்­லையை நிர்­ண­யிப்­பது மற்றும் காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­களை நிய­மிப்­பது என்­பன இஸ்­லாத்­துக்கு எதி­ரான விட­யங்கள் என்றும் அவற்றில் எந்த வித விட்­டுக்­கொ­டுப்­புக்கும் இட­மில்லை எனக் கூறினர். 

தற்­பொ­ழுது பல­தார மணம் மற்றும் காதி நீதி­மன்­றங்கள் என்­பன அகற்­றப்­படப் போகின்­ற­மையை உணர்ந்து கொண்­டுள்ள அவர்கள் தமது இலக்­கு­களை மாற்­றி­ய­மைத்­துள்­ளனர்.

பல­தார மணத்தை துஷ்­பி­ர­யோகம் செய்து அதனை அனு­ப­வித்து வந்தோர் பல­தார மணம் பற்றி ”குர்ஆன் வழங்கும் உரிமை” பற்றி சல­ச­லக்க ஆரம்­பித்­துள்­ளனர். மற்றும் சிலர் காதி நீதி­மன்­றங்­களை அகற்­றுதல் என்ற விட­யத்தை சமூக ஊட­கங்கள் ஊடாக விமர்­ச­னத்­துக்கும் கேள்­விக்கும் உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். துஷ்­பி­ர­யோ­கத்தால் பாதிக்­கப்­பட்டு வழ­மை­யான நீதி­மன்­றங்கள் ஊடாக முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தின் மீதான சீர்­தி­ருத்­தத்தை சரி காணும் கள மட்­டத்தில் உள்ள செயற்­பாட்டு பெண்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட பெண்கள் அண்மைக் கால­மாக இலக்கு வைக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்தச் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு எதி­ராக குர­லெ­ழுப்­புவோர் அச்­சீர்­தி­ருத்­தங்­களில் அடங்­கி­யுள்ள பின்­வரும் மூன்று விட­யங்கள் தொடர்­பா­கவே தமது எதிர்ப்பை வெளி­யி­டு­கின்­றனர்: பல­தார மணம், காதி நீதி மன்­றங்கள் மற்றும் முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் இருந்து விலகி இருப்­ப­தற்­கான அடிப்­படை உரிமை.

பல­தார மணம்
பல­தார மணம் என்­பது இஸ்­லாத்தில் கட்­டா­ய­மான விட­ய­மொன்­றல்ல. மேலும் அது விருப்­புக்­கு­ரிய தெரிவு என்றும் கூற முடி­யாது. துனி­சியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் பல­தார மணத்தை தடை­செய்­துள்­ளன. அதன் அனு­மதி, ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தன்மை மற்றும் பிர­யோகம் என்­பன தொடர்பில் நீதி­யா­ளர்கள் மற்றும் இஸ்­லா­மிய சட்ட நிபு­ணர்­க­ளி­டை­யேயும் கருத்து வேறு­பா­டுகள் நில­வு­கின்­றன.

இலங்­கையில் பல­தார மணம் என்­பது கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­டது என எவ­ரா­வது கூறு­வா­ரே­யானால், அது பாரி­ய­தொரு பொய்­யா­கவும் ஏமாற்றுக் கதை­யா­க­வுமே அமையும். பல­தார மணத்தை அனு­ம­திப்­பது ஒழுக்­க­மற்ற மற்றும் திரு­ம­ணத்­துக்கு வெளியில் காணப்­படும் உற­வுகள் அல்­லது மறு­ம­ண­வா­ளி­களை வைத்­தி­ருப்­பதை தடுக்­கி­றது அல்­லது அகற்­று­கின்­றது என வாதி­டு­ப­வர்கள் யதார்த்­தத்தை உண­ரா­த­வர்­க­ளா­கவே இருக்க வேண்டும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், மனை­வி­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் துஷ்­பி­ர­யோகம், மனை­வி­களை வன்­மு­றை­யாக நடத்­துதல், தனது விருப்­பப்­படி மனை­விகள் மற்றும் பிள்­ளை­களை கைவிட்டுச் செல்லல், திரு­ம­ணத்தை பதிவு செய்தல் கட்­டா­ய­மா­னதாக இல்­லா­ததால் தந்­தையின் பெயர் இல்­லாத பிள்­ளைகள் கல்­வியைப் பெறு­வதில் உள்ள சிக்­கல்கள் உள்­ள­டங்­க­லாக எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் என்­பன ஆய்வு செய்­யப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். பல­தார மணம் புரிவோர் ஆகக் கூடு­த­லாக நான்கு மனை­விகள் என்ற எல்­லைக்குள் தம்மை மட்­டுப்­ப­டுத்­து­வ­தில்லை.

இலங்கை பன்­மைத்­துவம் கொண்ட நாடொன்­றாக மாற்­ற­ம­டைய வேண்­டு­மென்று விரும்­பு­கின்றோம். முஸ்­லிம்­க­ளா­கிய நாம் மற்­றை­ய­வர்­களைப் போன்று சம­மாக நடத்­தப்­பட வேண்டும் என எதிர்­பார்க்­கின்றோம். இவ்­வா­றான சூழ­மைவு ஒன்றில் இந்த ”முஸ்லிம் பாது­கா­வ­லர்கள்” பன்­மைத்­து­வத்தை ஊக்­கு­வித்து முஸ்­லிம்­களை சிறந்­த­தொரு நிலையில் வெளி­யு­ல­குக்கு காண்­பிக்க வேண்­டுமா அல்­லது திரை மறைவில் சூட்­சு­ம­மான கை முறுக்­குதல் மற்றும் மிரட்­டல்கள் போன்ற செயல்­களில் ஈடு­பட வேண்­டுமா?

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவை பொறுத்த வரை அவ்­வ­மைப்பு ஹலால் சான்­றிதழ் அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பால் பாது­காக்­கப்­பட்ட முடக்­கப்­பட இய­லாத அடிப்­படை உரி­மை­யான நல்­ல­டக்க உரிமை என்­ப­வற்றில் மேற்­கொண்ட விட்­டுக்­கொ­டுப்­புகள் எம் முன்ேன உள்­ளன. இலங்­கையில் மனித உரி­மைகள் மற்றும் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் மீறப்­பட்ட நிலையில் அவ்­வ­மைப்பு கடல் கடந்து சென்று அவ்­வு­ரி­மைகள் இங்கு நன்கு பாது­காக்­கப்­ப­டு­வ­தாக பொய்­யு­ரைத்­­த­தையும் நாம் அறிவோம். இவ்­வே­ளையில் அவர்கள் தேவை­யற்ற அல்­லது மதத்­தினால் கட்­டா­ய­மாக்­கப்­ப­டாத மேலும் பல முஸ்லிம் பெண்கள் மற்றும் பிள்­ளை­களை நிர்க்­க­திக்கு உள்­ளாக்­கி­யுள்ள பல­தார மணம் என்ற விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்பை வழங்கி முன்­னு­தா­ரணம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வது பற்றி சிந்­திக்க வேண்டும்.

காதி நீதி­மன்­றங்கள்
நீண்ட கால­மாக அனைத்து துய­ரங்­க­ளுக்­கு­மான ஊற்­றாக காதி நீதி­மன்ற முறைமை அமைந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. காதி நீதி­மன்­றங்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய சட்­டங்கள் கார­ண­மாக பெண்கள் அங்கு எதிர்­நோக்கும் அநீதி கார­ண­மாக இந்தச் சீர்தி­ருத்­தத்­துக்­கான கோரல் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. அங்கு பெண்கள் செல்லும் நேரங்­களில் தாம் அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக, கௌர­வ­மி­ழக்கச் செய்­யப்­ப­டு­வ­தாக, பாகு­பாட்­டுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக மற்றும் பாது­காப்­பற்­ற­வர்­க­ளாக உண­ரு­கின்­றனர். காதி நீதி­மன்­றங்கள் நீதியை குழி­தோண்டிப் புதைக்கும் கட்­ட­மைப்­பு­க­ளா­கவே உள்­ளன.

இந்­நி­லையை நிரூ­பிப்­ப­தற்கு போதிய புள்­ளி­வி­ப­ரங்கள், சம்­பவ குறிப்­புகள், ஆய்வு கண்­ட­றி­தல்கள் மற்றும் வாக்­கு­மூ­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. நீதி­யுடன் காதி நீதி­மன்­றங்கள் ஒத்­தி­சை­வாக செயற்­பட்ட அனு­ப­வங்கள் மற்றும் யதார்த்­தங்­களை எம்மால் காண முடி­யா­துள்­ளது. யதார்த்­தத்தில் காதி நீதி­மன்ற முறைமை திருத்­தி­ய­மைக்­கப்­பட முடி­யாத நிலைக்கு அப்பால் சென்­று­விட்­ட­தாக பல முஸ்­லிம்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். அதன் அடிப்­ப­டையே சேத­ம­டைந்து விட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அது சமத்­துவம் மற்றும் நியா­ய­மாக நடத்­தப்­படல் ஆகிய இஸ்­லாத்தின் அடிப்­படைக் கொள்­கை­க­ளையே மீறு­வ­தாகக் காணப்­ப­டு­கின்­றது. அது இஸ்­லாத்­துக்கு நேரெ­தி­ரான விட­ய­மாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது.

காதி நீதி­ப­தி­யாக ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான முழு­மை­யான தேவை­யாக அமை­வது ”நன்­ன­டத்தை கொண்ட முஸ்லிம் ஆண் ஒருவர்” என்­பது மாத்­தி­ர­மே­யாகும். குறிப்­பிட்டு அடை­யாளம் காணக்­கூ­டிய ஒரு சிலரைத் தவிர பெரும்­பான்­மை­யான காதி நீதி­ப­திகள் நன்­ன­டத்தை கொண்­ட­வர்­க­ளாக உள்­ள­னரா என்­பது கேள்­விக்­கு­றியே.

காதி நீதி­மன்­றங்­களின் அமைப்­பா­னது இலங்­கையின் நீதி நிரு­வா­கத்தின் பிர­தான நீரோட்­டத்­துக்கு வெளியே அமையப் பெற்றுக் காணப்­ப­டு­கின்­றது. அங்கு பொருத்­த­மான உட்­கட்­ட­மைப்­பு­களோ, பௌதீக அல்­லது நிரு­வா­கத்­துக்­கு­ரிய வச­தி­க­ளோ காணப்­ப­டு­வ­தில்லை. காதி நீதி­ப­தி­களின் சபை உள்­ள­டங்­க­லாக இந்த நீதி­மன்­றங்கள் சனிக்­கி­ழ­மை­களில் மாத்­தி­ரமே இயங்­கு­கின்­றன. இருந்த போதும், இவ்­வ­மைப்பே ஒட்­டு­மொத்த முஸ்லிம் திரு­ம­ணங்கள், விவா­க­ரத்து, மற்றும் பரா­ம­ரிப்பு என்­ப­வற்­றுக்­கான நீதி மைய­மாக செயற்­ப­டு­கின்­றது. 

அர­சாங்கம் பாகு­பாடு மிக்க முறை­மையை அமை­தி­யாக அவ­தா­னித்­த­படி அதனை தக்க வைக்க நிதி­யையும் வழங்கி வரு­கின்­றது, வாதி­டத்­தக்க வகையில் இந்­நிலை அர­சி­ய­ல­மைப்பின் சமத்­துவம் தொடர்­பான ஏற்­பா­டுகள் மற்றும் நெறிப்­ப­டுத்தற் கொள்­கை­களை (Directive Principles) மீறு­வ­தாக இது அமை­கின்­றது. இந்த வகையில் அமைந்த பாகு­பாடு மிக்க முறைமை ஒன்­றுக்கு வரி­யி­றுப்­பா­ளர்­களின் பணத்தை வழங்கி பேணு­வது தொடர்பில் அர­சாங்கம் எந்த வித குற்­ற­வு­ணர்வும் அற்­ற­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் பெண்­களின் இந்த கோரிக்கை அர­சாங்­கங்கள் தனது குடி­மக்­களை பாது­காத்தல் மற்றும் சம­மாக நடத்­துதல் என்­ப­வற்­றுக்­கான வேண்­டு­தலின் அடிப்­ப­டை­யா­கவே அமை­கின்­றது. இங்கு முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் மாவட்ட நீதி­மன்­றங்கள் என்ற பிர­தான நீரோட்ட நீதி­மு­றை­மையின் கீழ் நிரு­வ­கிக்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்கும் வகையில் காதி நீதி­மன்ற முறை­மையை அகற்றும் முன்­மொ­ழிவை ஏற்று, முழு­மை­யாக சீர்­தி­ருத்­தப்­பட்ட முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்­தினை நீதி நிரு­வா­கத்தின் பிர­தான அங்­க­மா­கிய மாவட்ட நீதி மன்­று­க­ளுக்கு ஊடாக செயற்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு சகல முஸ்­லிம்­க­ளி­டமும் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

மாவட்ட நீதி­மன்­றங்கள் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான, நடு­நி­லை­யான மற்றும் கௌர­வ­மான சூழலை நிச்­ச­ய­மாக வழங்கும். அவை நிச்­ச­ய­மாக பெண்­களை கீழ்த்­த­ர­மாக நடத்­து­வ­தையோ அவர்கள் அவ­தூ­றுக்கு அல்­லது துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையோ அனு­ம­திக்­காது. முஸ்­லிம்கள் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து நீதிக்­கான அணு­கலை சிறப்­பா­கவும், வேக­மா­கவும் அத்­துடன் நீதியை இல­கு­வாக அணு­குதல் உள்­ள­டங்­க­லாக மேலும் தேவை­யான சட்ட சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களில் பின் நிற்­காது செயற்­பட வேண்டும்.

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் இருந்து விலகி இருப்­ப­தற்­கான அடிப்­படை உரிமை

இலங்கை அர­சாங்கம் பாகு­பாடு மிக்க இந்த காதி நீதி­மன்­றங்­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான உதவி மற்றும் ஆத­ர­வினை வழங்­கு­வது மாத்­தி­ர­மன்றி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­க­ளையும் தொடர்­கின்­றது. முஸ்லிம் மக்கள் பொது திரு­மணப் பதிவு கட்­டளைச் சட்­டத்தின் கீழ் திரு­மணம் புரிய, அல்­லது / அத்­துடன் விவா­க­ரத்­தினை மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டா­த­துடன் திரு­மணம் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்­காக அவர்கள் வழ­மை­யான நீதி­மன்­றங்­களை அணு­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இலங்­கையில் உள்ள முஸ்­லிம்கள் திரு­மணம் செய்ய தீர்­மா­னித்தால், அவர்கள் முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தின் நிய­தி­க­ளுக்கு ஏற்­பவே அதனை மேற்­கொள்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

நாடு முழு­வதும் முஸ்லிம் பெண்கள் எதிர்­கொள்ளும் துய­ரங்­களைக் கண்­ணுற்று, அவற்­றினால் உந்­தப்­பட்டு மற்றும் அப்­பெண்­க­ளுக்கு துயர் தீர்க்கும் வகையில் கருத்­தாழம் கொண்ட சீர்­தி­ருத்­தங்­களை முஸ்லிம் ஆண்கள் இல­கு­ப­டுத்த மாட்­டார்கள் என்­ப­தையும் புரிந்து கொண்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மருத்­து­வ­ரு­மான வைத்­தியர் (திரு­மதி) துஷிதா விஜே­மான்ன முஸ்லிம் பெண்­களின் ஆகக் குறைந்த வயதைத் தெரிவு செய்தல், முஸ்­லிம்­களை பொது திரு­மணப் பதிவு கட்­டளைச் சட்­டத்தின் கீழும் திரு­மணம் செய்ய அனு­ம­தித்தல் மற்றும் விவா­க­ரத்தை மேற்­கொள்­வ­தற்கு மாவட்ட நீதி­மன்றம் அல்­லது காதி நீதி­மன்றம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்­பினை வழங்கல் என்­ப­வற்றை மேற்­கொள்­வ­தற்­காக மூன்று தனி நபர் பிரே­ர­ணை­களை முன் வைத்தார். பாரா­ளு­மன்றம் முன்­னரே கலைக்­கப்­பட்­ட­மை­யினால் அவற்றின் மீதான இரண்டாம் வாசிப்பு நிறை­வு­றாத நிலையில் அப்­பி­ரே­ர­ணை­களை முன்­ந­கர்த்தி செல்ல முடி­ய­வில்லை. நடப்பு பாரா­ளு­மன்­றத்தில், மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திரு. பிர­மித பண்­டார தென்­னக்கோன் மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட அதே நோக்­கங்­களை அடைந்து கொள்­வ­தற்­காக முந்­தை­ய­தை­யொத்த தனி­நபர் பிரே­ர­ணை­களை சமர்ப்­பித்­துள்ளார். அவற்றின் மீதான முதலாம் வாசிப்பு கடந்த டிசம்பர் 2020 இல் இடம்­பெற்­றது.

தனது உறுப்­பினர் ஒருவர் பிழை­யா­ன­தொன்றை சரி செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்றார் என்­பதை அர­சாங்கம் புரிந்து கொண்­ட­மை­யி­னாலோ, என்­னவோ இச்­சந்­தர்ப்­பத்தில், அரசு விட­யங்­களை தனது கைகளில் எடுத்து இந்த தனி நபர் பிரே­ர­ணை­களில் உள்ள விட­ய­தா­னங்­களை முன்­ன­கர்த்தி செல்­கின்­றது போலும். பொது­வான சட்­டத்தின் கீழும் முஸ்­லிம்கள் திரு­மணம் செய்­வதை அனு­ம­திப்­ப­தற்கு தேவை­யான சட்டத் திருத்­தங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அறிக்­கைகள் குறிப்­பி­டு­கின்­றன.

சீர்­தி­ருத்­தங்­களை தடுப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் தீவிர முயற்­சிகள்

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களின் மீதான கருத்­தாழம் கொண்ட சீர்­தி­ருத்­தங்­களை தீவி­ர­மாக எதிர்ப்போர் முஸ்­லிம்கள் தாம் திரு­மணம் செய்ய விரும்பும் சட்­டத்தை தெரிவு செய்­வதை இய­லு­மாக்கும் சட்டத் திருத்த முயற்­சி­க­ளையும் எதிர்க்­கின்­றனர்.

முன்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அனைத்து குழுக்­களும் தமது அறிக்­கை­களை இறு­தி­யாக்கம் செய்­வ­தற்கு முன்னர் சமூ­கத்தின் பரந்து பட்ட பிரி­வு­க­ளுடன் பாரிய ஆலோ­ச­னை­களை மேற்­கொண்­டி­ருந்­தன. இந்­நி­லையில் தற்­போது எந்­த­வொரு சீர்­தி­ருத்­தமும் சமூ­கத்­திடம் இருந்து ஆலோ­சனை மேற்­கொள்­ளப்­பட்டே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என தீய எண்ணம் மற்றும் பெண்­ணி­னத்தை அடக்­கி­யாள எண்ணும் ஆண்­களால் முன்­வைக்­கப்­படும் கோரிக்­கைகள் சீர்­தி­ருத்­தங்­களை தடுப்­ப­தற்­கான முயற்­சியே தவிர வேறொன்­று­மில்லை. பல வரு­டங்­க­ளாக சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான கோரிக்கை சமூ­கத்­தினுள் இருந்து வெளிப்­பட்­ட­தே­யன்றி அது வெளிப்­புறம் இருந்து எழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதே இங்­குள்ள யதார்த்­த­மாகும். மேலும், இந்த ஆண்­களைப் பொறுத்­த­ளவில் அவர்கள் ”சமூகம்” எனக் கூறு­வது ஆண்­களை மாத்­தி­ர­மே­யாகும். சமூ­கத்தில் 50% இற்கும் அதி­க­மா­க­வுள்ள பெண்கள் சமூக ஆலோ­சனைச் செயற்­பா­டு­களில் பங்­கேற்­பதில் இருந்து அவர்கள் வேண்­டு­மென்றே மற்றும் தீய நோக்­குடன் இந்த ஆண்­களால் தடுக்­கப்­ப­டு­கின்­றனர்.

இந்த இரக்க குண­மற்ற, சுய­நலம் மிக்க, ஆதிக்க மனப்­பான்மை கொண்ட மற்றும் விட்­டுக்­கொ­டுக்­காத ஆண்கள் மத நம்­பிக்­கைகள் என்ற போர்­வையில் அப்­பாவி மக்களை தவ­றாக வழி­ந­டத்தி அவர்­க­ளுக்கு சாத­க­மா­ன­வர்­களை பிழை­யாக திசை திருப்பி கையெ­ழுத்­துக்­களை திரட்டி வரு­கின்­றனர். அவர்கள் கூறும் விடயங்களுக்கு நேர்மாறானதாகவே உண்மைகள் உள்ளன. முன்கொண்டு செல்லப்பட இருக்கின்ற இந்த சீர்திருத்தங்களை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் பெண்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மதத் தலை­வர்­களும் தமது சக குடி­மக்­க­ளுடன் ஒன்றுபட்டு இந்த உரி­மை­களை முன்­கொண்டு செல்ல வேண்­டிய தேவை மிக்க நேர­மாக இன்­றைய சூழல் அமைந்­துள்­ளது. இஸ்­லாத்தின் பெயரில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் அநீ­தி­களை களை­வது மாத்­தி­ர­மன்றி அவர்­க­ளுக்கு எதி­ராகக் காணப்­படும் சமத்­து­வ­மின்­மை­களை அகற்­று­வ­தற்கு கடப்­பாட்டை காண்­பிக்கும் அமைச்சர் அலி சப்ரி அவர்­க­ளுக்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமது ஆதரவை வழங்க வேண்டிய நேரமாகவும் இது அமைந்துள்ளது.

இங்கு காணப்­படும் இலக்­காக அமை­வது முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து விட­யங்­களின் நியா­யா­திக்க நிலையை உயர்த்­து­வ­தாகும், அதன் மூல­மாக இவ்­வி­டயம் பிர­தான மயப்­ப­டுத்­தப்­பட்ட நீதி நிரு­வா­கத்தின் கீழ் கொண்டு வரப்­படும். இது நீண்ட காலத்­துக்கு முன்­னரே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்­டிய விட­ய­மாகும். இது அனை­வரும் சம­மாக மற்றும் கௌர­வ­மாக நடத்­தப்­படல், ஒவ்­வொரு பிர­ஜைக்கும் நீதி­யான தீர்ப்பு கிடைக்க வழி வகுத்தல், மற்றும் அர­சாங்­கத்­தினை வகை கூற வைத்தல் போன்ற விட­யங்­களை உறுதி செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ரவை என்­பன இவ்­வி­டயம் தொடர்பில் தற்­போது எடுத்­தி­ருக்­கின்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்க வேண்டும். அர­சியல் இலா­பத்­துக்­காக நீதியை விட்­டுக்­கொ­டுக்­கவோ அல்­லது சம­ரசம் செய்­யவோ கூடாது. இந்தச் சீர்­தி­ருத்­தங்கள் இய­லு­மான விரைவில் சட்­ட­மாக்­கப்­பட வேண்டும். அவை முஸ்லிம் மக்களுக்கு சுதந்திரத்தையும் அனைவருக்கும் நீதிக்கான சம அணுகலையும் வழங்கும்

சட்டத்தரணி அமீர் பாயிஸ் Vidivelli

No comments:

Post a Comment