கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டாலும் மின் உற்பத்தி நிலையத்தின் முகாமைத்துவ அதிகாரம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படாத விடத்து அது சம்பந்தப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் பரிசீலிக்க முடியுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கு வெளிநாட்டு நிறுவனத்திற்கு சென்றாலும் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரம் அரசாங்கத்தின் வசமே இருக்குமென மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் தலைவர் கூறுவதுபோல் நிர்வாக அதிகாரம் வெளிநாட்டு நிறுவனத்திற்கு செல்லாமல் இருக்குமானால் அது தொடர்பில் எமது நிலைப்பாட்டை பரிசீலிக்கலாம் எவ்வாறெனினும் அந்த உடன்படிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment