வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் தப்பியோட்டம் : கிராமத்தில் 32 பேருக்கு தொற்று! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் தப்பியோட்டம் : கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தினைச் சேர்ந்த 3 பேர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச் சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதியைச் சேர்ந்த 150 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, அவர்களில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment