கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 20 ரயில் பெட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 20 ரயில் பெட்டிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்கிறது என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ் RITES Ltd நிறுவனத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் 160 பெட்டிகளின் ஒரு தொகுதியே தற்போது வந்தடைந்துள்ளதுடன், வெகுவிரைவில் மேலும் பல ரயில் பெட்டிகள் வந்தடையவுள்ளன.

No comments:

Post a Comment