முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை 300/9
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்பதற்கு அமைவாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அவிஷ்க பெனாண்டோ மற்றும் மினோத் பானுக்க இருவரும் களமிறங்கினர்.

இருவரும் நன்றாக ஆடிய வேளை பானுக்க 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இவர் இந்த போட்டியின் விக்கெட் காப்பாளராக செயற்படுகிறார்.

பின்னர் அவிஸ்கவுடன் இணைந்தார் பானுக்க ராஜபக்‌ஷ அவரும் வந்த வெகத்தில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி ஒரு கட்டத்தில் சற்று தடுமாற்றம் அடைந்தது.

அதன் பின் இணைந்த தனஞ்சய டி சில்வாவும் அவிஸ்கவும் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 79 ஓட்டங்கள் பெற்றனர். தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்கள் பெற்றிருந்தவேளை ஆட்டமிழந்தார்.

அவிஸ்கவுடன் இணைந்தார் சரித் அகலங்க மத்திய வரிசையில் இலங்கை அணிக்கு உத்வேகம் அளித்த அகலங்க 72 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து சென்றனர்.

அகில தனஞ்சய, துஸ்மந்த சமீர ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க கருணாரத்ன 7 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக மஹராஜ்,ரபடா தலா இரு விக்கெட்டையும் சம்ஸி, மர்கிராம் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

தென்னாபிரிக்கா 286/6
அதனைத் தொடர்ந்து 301 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாபிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் சிறந்த ஆரம்பத்தை வழங்கி 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அண்மித்த போதிலும் 14 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டனர்.

தெம்பா பவுமா 38 ஓட்டங்கள் பெற்ற நிலையில் காயம் காரணமாக அரங்கை விட்டு வெளியேறினார். அவ்வணி சார்பில் ரஸ்ஸி வன் தெர் துஸ்ஸன் 59 ஓட்டங்களையும், ஹென்ரிச் க்ளாசன் 36 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளையும், சாமிக கருணாரத்ன, வணிந்து ஹசரங்க, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

போட்டித் தொடர்
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20க்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

தசுன் ஷானகவின் தலைமையில் போட்டியில் பங்கேற்கும் இப் போட்டியில் இலங்கை அணியில் 4 துடுப்பாட்ட வீரர்களும், 3 பந்து வீச்சாளர்களும், 4 சகலதுறை வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

பலரும் எதிர்பார்த்திருந்த விக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஸ் சந்திமால் இப் போட்டிக்கு அணியில் இணைக்கப்படவில்லை. எனவே, கடந்த இந்திய தொடரில் பெரிதாகப் பிரகாசிக்காத மினோத் பானுக்கவிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி
தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெனாண்டோ, மினோத் பானுக (விக்கெட் காப்பாளர்), பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம,

தென்னாபிரிக்க அணி
டெம்பா பவுமா (தலைவர்), எய்டன் மர்க்ரம், ஜென்னமன் மலன், கெயில் வெர்ரைன், ரஸ்ஸி வென் டர் டஸன், ஹென்ரிச் கிலாசன் (விக்கெட் காப்பாளர்), எண்டைல் பெஹெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ், காகிஸோ ரபாடா, என்ரிச் நோக்கியா, டப்ரைஷ் சம்சி

No comments:

Post a Comment