இலங்கை ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை - News View

About Us

Add+Banner

Thursday, August 26, 2021

demo-image

இலங்கை ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

NW04
கொரோனா திரிபு வைரசான டெல்டாவினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்து கொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

சீனாவின் வூஹான் கொரோனா வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள அச்சங்கம் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

வூஹான் வைரஸ்களை விட அல்பா, டெல்டாவினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த வைரஸ்கள் வெளிப்படுத்தும் தடுப்பூசிகளிற்கான எதிர்பாற்றலையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம். 

நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராக வேண்டும். 

இந்த பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம். இது டெல்டாவை விட ஆபத்தானதாக காணப்படக்கூடும் நாட்டினால் இதனை எதிர்கொள்ள முடியாது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *