இலங்கையில் எவ்வித தடுப்பூசியையும் பெறாதவர்கள் குறித்த விபரங்கள் வெளியானது - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

இலங்கையில் எவ்வித தடுப்பூசியையும் பெறாதவர்கள் குறித்த விபரங்கள் வெளியானது

நாட்டில் தற்போது வரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேருக்கு எவ்வித கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் சனத் தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 35,19,190 ஆக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் 30,63,651 பேருக்கு ஏதேனும் ஒரு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாகவும் 64,427 பேர் அந்த மாவட்டத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதுள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட 36,014 பேர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment