தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்கள் நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள மலாலா யூசுப்சாய் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 25, 2021

தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்கள் நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள மலாலா யூசுப்சாய்

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மீது தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் பயங்கரவாதக் குழுவுடன் தனக்கு ஏற்பட்ட சோதனையையும் விவரித்துள்ளார்.

போஸ்டனில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், 2012 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பாடசாலைக்கு செல்லும் வழியில் பாகிஸ்தானிய தலிபான் பயங்கரவாதியால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பால் தனது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முற்றுகை காரணமாக பல பெண்கள் மோசமான தலைவிதியை சந்திக்க நேரிடும் என்றும் மலாலா குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பலருடன் கலந்துரையாடினேன், உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதினேன், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உரிமை ஆர்வலர்களுடன் பேசினேன்.

கடந்த இரண்டு வாரங்களில், அவர்களில் பலருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான இடத்திற்கு எங்களால் உதவ முடிந்தது. ஆனால் அனைவரையும் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும், ”என்று அவர் மேலும் கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அங்கு பெண்களின் உரிமைகள் குறித்து பரவலான கவலையை உருவாக்கி வருகிறது.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான தலிபான்கள் ஆட்சியின் போது, ஆப்கானிஸ்தான் பெண்கள் பயங்கரவாதக் குழுவின் பிற்போக்குத்தன ஆட்சியால் பாதிக்கப்பட்டனர்.

தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் அரசின் பெண் தொழிலாளர்களை மறு அறிவித்தல் வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment