பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் தொடரும் - 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் உயா் ஸ்தாணிகா் முஹம்மத் சாத் கட்டாக் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் தொடரும் - 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் உயா் ஸ்தாணிகா் முஹம்மத் சாத் கட்டாக்

(அஸ்ரப் ஏ சமத்)

பாக்கிஸ்தான் நாட்டினது 75வது சுதந்திர தினம் (14.08.2021) திகதி பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்தினால் கொழும்பில் கொண்டாடப்பட்டது.

பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் அவா்கள் தேசிய கொடியை ஏற்றியபின் பாக்கிஸ்தான் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின"வைரவிழாவை" கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொவிட் முறைக்கேட்ப சுகாதார பாதுகாப்பு முறையில் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனா்.

திருமதி ஆயிஷா அபூ பக்கர் ஃபஹாத், இரண்டாவது செயலாளர் (அரசியல்) பாகிஸ்தான் ஜனாதிபதி கெளரவ டாக்டர் ஆரிஃப் ஆல்வியின் செய்தியை வாசித்தார். இதில் "பாகிஸ்தானியர்கள் விவேகம் மிக்க மற்றும் தைரியமான மக்களாவார்கள். இதனால், பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றிகளைப் பெற்று,மற்ற நாடுகளிலிருந்து தனித்துவமானதாக விளங்குகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நீண்டகாலமாக போராடி வென்ற உண்மையை உலகம் பாராட்ட வேண்டும்.இதேபோல், பாகிஸ்தான் அணுசக்தி தடுப்பு வளர்ச்சியானது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு பெரிய சாதனையாகும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரதமரின் செய்தி பார்வையாளர்களுக்காக திருமதி அஸ்மா கமால், வர்த்தக செயலாளர் அவர்களால் வாசிக்கப்பட்டது. 

அந்தச் செய்தியில் “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் நமது தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்போது, காஇத்-இ-ஆஸம் முஹம்மது அலி ஜின்னா உருவாக்க நினைத்த ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்ற உறுதியான தீர்மானத்தை நாம் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

நமது வரலாற்றை நோக்கும் போது, ஒற்றுமையான, அமைதியான மற்றும் நெகிழ்ச்சி தன்மை கொண்ட தேசமாக உருவெடுக்க நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். இப்பொழுதும் கூட, மாறிவரும் பிராந்திய நிலைமைகளும், சில உள்நாட்டு பிரச்சனைகளும் தொடர்ந்து நம் தீர்மானத்தை சோதித்துப்பார்க்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் போலவே, இச் சோதனைகளையும் எங்கள் தனிச்சிறப்புப்பண்புகளால் வென்று ஒரு சிறந்த தேசமாக சக்தி பெறுவோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கையில், பாரிய சவால்களை எதிர்கொண்டு, பாகிஸ்தானின் கனவை அடைய ஈடு இணையற்ற தியாகங்களை மேற்கொண்ட, நமது எதிர்காலத்திற்காக அவர்களது வாழ்வை தியாகம் செய்த தேசத்தின் முன்னோர்களை நினைவுபடுத்தினார். 

வல்லமையுள்ள அல்லாஹ்விக்கு நன்றி தெரிவிக்கும் நாளான இன்று, தேசத்தின் உயரிய நோக்கங்களாக உள்ள ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்போம் என்ற நமது உறுதிமொழியை புதுப்பிக்கும் நாளான ஆகஸ்ட் 14 என்பது ஆனந்தத்தின் நாளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பாகிஸ்தான் உறவு குறித்து உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கும் போது, பாகிஸ்தான் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில், இலங்கையுடனான உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை அனைத்து அரங்குகளிலும் அளித்து வருவதாகவும், அது எப்போதும் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
பாக்கிஸ்தான் என்ற நாட்டுக்கு வித்திட்ட மொஹமட் அலி ஜின்னாவின் அத்துடன் அல்லாமா இக்பால் ஆகியோா்களது தீக்கதரிசனத்தையும் அவர்களது தலைமைத்துவத்தினாலும் உலகில் ஒரு தலை சிறந்த நாடாக பாக்கிஸ்தான் வளா்ந்து வருகின்றது என அவரை நினைவு கூா்ந்து உரையாற்றினா்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவிவருகின்ற கஸ்மீா் பிரச்சினை சுமுகமாக சமாதானமாக தீா்க்கப்படல் வேண்டும். 

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவுப்பாலம் கடந்த 75 வருடங்களாக மிக்க கட்டுக்கோப்புடன் நட்புறவாக நிலவி வருகின்றது. இலங்கையின் கடந்த கால தற்போதைய அரசாங்கங்களோடு அவ்வப்போது பாக்கிஸ்தான் நாட்டினால் முடியமான அளவு எமது உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்துள்ளோம். 
இலங்கை பௌத்த மக்களது காலை கலாச்சார பௌத்த மதம் சம்பந்தமான நுாதனசாலைகளை பாக்கிஸ்தான் பாதுகாத்து வருகின்றது. அன்மையில் இலங்கையில் இருந்து பௌத்த குருமாா்களை பாக்கிஸ்தான் அழைத்து செல்லப்பட்டு அங்கு அவைகள் காண்பிக்கப்பட்டது.  இலங்கையின் பொருளாதார அரசியல் துறையில் இரு நாடுகளுக்கிடையே நீண்டகால உறவுகள் ஒத்துழைப்பும் நல்கி வருகின்றது. எதிர்காலத்திலும் அவை முன் எடுக்கப்படும். 

உலக நாடுகளில் நிகழ்கின்ற கொவிட் 19 தொற்று நோய் நீங்கியதும் பாக்கிஸ்தான் இலங்கை நட்புரவு அபிவிருத்தி விடயங்கள் கல்வி, புலமைப்பரிசில், பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதி பாதுகாப்பு, சுற்றுலாத்துறைகள் மேலும் விரிவுபடுத்ப்படும். என உயா் ஸ்தாணிகா் அங்கு உரையாற்றினாாா். 

அத்துடன் உயா்ஸ்தாணிகரினால் 75 வருட சுதந்திர நினைவு தினக் கேக் வெட்டி சிறுவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பபட்டது.

No comments:

Post a Comment