பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அனைத்து பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அமில சந்தீப மற்றும் கோசலா ஹங்சமாலி, முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நால்வரில் கோசலா ஹங்சமாலி தவிர்ந்த ஏனைய மூவருக்கும் சிறைச்சாலையில் வைத்து அண்மையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில், பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர்கள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 03ஆம் திகதி, பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment