மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 5, 2021

மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் - உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனாவுக்கு எதிராக எல்லா நாடுகளிலும் 10 சதவீதத்தினருக்காவது முதலாம் கட்ட தடுப்பூசி கிடைப்பதற்கு உதவும் வகையில் மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக் கொண்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போடப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றி இப்போது உலகில் 200 நாடுகளில் பரவி விட்டது.

இதற்கு எதிரான தடுப்பூசிகள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் மக்களுக்கு போடப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தி நாடுகள், பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் 3 ஆவது டோஸும் போட்டு விட விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போடப்படவில்லை.

இதன் காரணமாக குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்வதற்கு உதவும் வகையில்,  3 ஆவது டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையொட்டி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் கூறுகையில், “ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு  3 ஆவது டோஸ் செலுத்துவது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு பணக்கார நாடுகள் அதிகமாக உதவ வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment