தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் “தோர்” என்றழைக்கப்படுகின்ற சிங்கத்திற்கு இங்கிலாந்தில் பரவிய அல்ஃபா கொவிட் பிறழ்வு தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சோல் மிருகக்காட்சி சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘தோர்’ என்றழைக்கப்படுகின்ற சிங்கத்திற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை கடந்த மாதம் 18 ஆம் திகதி அறிவித்தது.
No comments:
Post a Comment