குருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஏனைய வீரர்கள் எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்தது.
போட்டி ஆரம்பமாவதற்கு நாணய சுழற்சி மேற்கொள்ள சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான குருனல் பாண்டியா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டது. இதனால் இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் குருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 8 வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனைகளில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் நேற்று நடைபெறவிருந்த இரண்டாவது டி-20 போட்டி இன்றிரவு 8.00 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை குருனல் பாண்டியா தற்சமயம் 7 நாட்கள் சுய தனிமையில் இருப்பார். சகலதுறை ஆட்டக்காரரான பாண்டியா டி-20 போட்டிக்குப் பிறகும் இலங்கையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும், அதேநேரத்தில் அவரது அணி வீரர்களும் இந்திய அணி நிர்வாகமும் ஜூலை 30 ஆம் திகதி நாடு திரும்பும்.
No comments:
Post a Comment