தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2022 இல் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, எதிர்வரும் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலவும் கொவிட்-19 பயணக் கட்டுப்பாட்டு நிலமைகளைக் கருத்திற் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே 30ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment