2022 இல் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, எதிர்வரும் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலவும் கொவிட்-19 பயணக் கட்டுப்பாட்டு நிலமைகளைக் கருத்திற் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மே 30ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment