(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் மீராவோடை பகுதியில் வசிக்கும் அறுபது வயதைத் தாண்டிய நபர்களுக்கு இன்று 10ம் திகதி தடுப்பூசி வழங்கப்பட்டது.
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற இத்தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment