சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், தற்போதைய கொவிட் அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை அதனை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பயற்சி நெறிகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பயிற்சி பெறவுள்ளோர் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment