இந்தியாவில் கொரோனா நோயாளிகளைத் தாக்கும் ’கருப்பு பூஞ்சை நோய்’ - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

இந்தியாவில் கொரோனா நோயாளிகளைத் தாக்கும் ’கருப்பு பூஞ்சை நோய்’

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகும் நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என அழைக்கப்படுகின்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதை வைத்தயர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.

பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது.

கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக்காக்க தருகின்ற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து, கொரோனாவை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகின்ற சில சேதங்களை தடுக்கின்றன. 

ஆனால் அவை நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment