இந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.
தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் ஆரம்பித்து, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.
வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாதமளவில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.
No comments:
Post a Comment