நோயாளர்களின் மருந்து வகைகளை வீடுகளுக்கே - விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

நோயாளர்களின் மருந்து வகைகளை வீடுகளுக்கே - விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக் கொள்ள  விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் நலன்கருதி குறித்த வசதியை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய, கண்டி, குருணாகல், கொழும்பு - 1, கொழும்பு - 4, கொழும்பு - 7, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மருந்து வகைகளை பெற்றுக் கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது

கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருணாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773

No comments:

Post a Comment