மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார் .

பாடப்புத்தங்கள் தொடர்பில் பாரிய பிரச்சினை நிலவுகின்றது. புதிய திட்டத்தின் பிரகாரம் வருடம் முழுவதற்கும் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் 3 தவணைகளுக்கும் பிரித்து வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் தற்போது காணப்படும் புத்தகங்களின் நிறை 3 இல் 2 வீதமாக குறைவடையும். தற்போது உள்ள புத்தகப்பையின் நிறை 9 கிலோ கிராமாக காணப்பட்டால் புதிய திட்டத்தின் பிரகாரம் 3 கிலோகிராமாக குறைவடையும்.

No comments:

Post a Comment