கொழும்புக்கான விமான சேவையை வாரத்திற்கு ஏழாக அதிகரித்த எமிரேட்ஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

கொழும்புக்கான விமான சேவையை வாரத்திற்கு ஏழாக அதிகரித்த எமிரேட்ஸ்

கொழும்புக்கான தனது சேவைகளை வாரத்தில் ஆறிலிருந்து ஏழு ஆக அதிகரிக்கப் போவதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. அதன்படி இந்த சேவை மே 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

கூடுதல் விமான சேவை சந்தை தேவைக்கு உதவும் மற்றும் கொழும்பிலிருந்து துபாய் வழியாக இணைப்புகளை மேம்படுத்தும்.

இந்த ஆண்டு பெப்ரவரியில் எமிரேட்ஸ் கொழும்புக்கான தனது விமான சேவைகளை வாரத்திற்கு ஆறாக உயர்த்ததியது. 

பெப்ரவரி 18 முதல் வாரத்தின் ஐந்தாவது விமானமும், பெப்ரவரி 27 முதல் வாரத்தின் ஆறாவது விமானமும் தமது சேவையை ஆரம்பித்திருந்தது.

No comments:

Post a Comment