குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஹரின் பெர்னாண்டோவிற்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஹரின் பெர்னாண்டோவிற்கு அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நாளை (23) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நடத்தப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் திணைக்களத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment