முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது..! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது..!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக் நிறஞ்சன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கமலநாதன் விஜிந்தனும் பொதுஜன பெரமுன சார்பில் அன்ரனி ரங்கதுசார ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா நடத்துவது என்பது தொடர்பான வாக்கெடுப்பில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

இந்நிலையில், மொத்தமாக 24 அங்கத்தவர்களைக் கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இருவர் சமூகமளிக்காத நிலையில் சுயேட்சை சார்பான இரு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி.யின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TELO) சார்பாக போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் 15 வாக்குகளையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அன்ரனி ரங்கதுசா நான்கு வாக்குகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் 11 மேலதிக வாக்குகளால் கமலநாதன் விகிர்தன் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டதாக உள்ளுராட்சி ஆணையாளர் பேட்ரிக் நிரஞ்சன் அறிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பான உறுப்பினர்கள் ஆகியோர் விஜிந்தனுக்கு ஆதரவை வழங்கினர். 

அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடயிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னர் தவிசாளராகப் பதவி வகித்த புளொட் சார்பான தவிசாளர் பதவி விலகியதைடுத்தே புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment