கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் தானசாலை, பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் தானசாலை, பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

வெசாக் காலப் பகுதியில் பாரிய கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் தானசாலைகள் மற்றும் பந்தல்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமைகள் காரணமாக இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் உபுல் ரோஹன கூறினார்.

அத்துடன் வட மத்திய மாகாணத்தை நோக்கிய யாத்திரைப் பயணங்களை தவிர்க்குமாறும், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment