சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது - அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது - அமெரிக்கா

அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் செயல்பாடுகளுக்கு கவலை தெரிவித்த அமெரிக்கா, இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் நிற்போம். 

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அறிவோம். நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான தீர்வு முறைக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்றார்.

No comments:

Post a Comment