இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை - பொதுமக்களிடம் உதவி கோரல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை - பொதுமக்களிடம் உதவி கோரல்

வவுனியா, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையான இராமையா நல்லநாதனை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். 2 நாட்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை (தொலைபேசி இலக்கம் - 0766975067) ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment