வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை - உதய கம்மன்பில

வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் உள்ளது என்பதாகவே நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment