ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1,400 டொலர் நிதியுதவி - திட்டத்தை வெளியிட்டார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1,400 டொலர் நிதியுதவி - திட்டத்தை வெளியிட்டார் ஜோ பைடன்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌

அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ 

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகின்ற 20ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். 

இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டொலர் நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்‌.

மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டொலரில் இருந்து 400 டொலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment