கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர் என அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதன் மூலம் சில அரசியல்வாதிகள் தனிப்பட்ட அரசியல் இலாபத்தினை அடைவதற்கு முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்ன செய்வது என்பது தற்போது தீர்வு காண முடியாத புதிராக மாறி விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படும் நிலவரத்தின் மத்தியில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பிரிவினைகளை உருவாக்காமல் சட்டத்தினை பின்பற்ற வேண்டும்.
எந்த சக்திக்கும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணியாமல் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணத்தில் மதபதற்றத்தினை அதிகரிப்பதற்கு இந்த விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment