கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள மறுப்பவர்களை பதிவு செய்வதற்கு ஸ்பெயின் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தப் பட்டியல் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் சல்வடோர் இல்லா தெரிவித்துள்ளார்.
எனினும் அதனை பொதுமக்கள் அல்லது தொழில் வழங்குநர்களுக்கு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்த வைரஸை தோற்கடிப்பதற்கு நாம் அனைவரும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வது சிறந்தது என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது.
ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசியை ஸ்பெயின் பயன்படுத்தி வருகிறது.
இது பற்றி லா செக்ஸ்டா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இல்லா, தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என்று குறிப்பிட்டார்.
தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதை மறுக்கும் ஸ்பெயின் நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பரில் 47 வீதமாக இருந்த நிலையில் தற்போது அது 28 வீதமாக குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்று காட்டுகிறது.
No comments:
Post a Comment