புலமைப்பரிசில் புள்ளிகளுக்கு அமைய தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

புலமைப்பரிசில் புள்ளிகளுக்கு அமைய தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரல்

இவ்வருடம் (2020) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமான புள்ளிகளைப் பெற்று தகுதி பெற்ற மாணவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டில் தரம் 6 இல் புதிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் அறிவுறுத்தல்களையும் உரிய பாடசாலையின் அதிபரிடமிருந்து, பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய மாணவர், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் போது, பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு, உரிய வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment