கொவிட்-19 நோய் நிலைமைக்கு இடையில் பெண்கள், சிறுமிகள் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை பலப்படுத்தவும் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

கொவிட்-19 நோய் நிலைமைக்கு இடையில் பெண்கள், சிறுமிகள் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை பலப்படுத்தவும் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம்

(க.பிரசன்னா)

பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை பலப்படுத்தவும் கொவிட்-19 உலகளாவிய நோய் நிலைமைக்கு இடையில் அவர்களின் சுகாதாரத் தேவைகளிற்கு ஆதரவாக இருப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்-கிழக்கு பிராந்தியங்களில் உடனடியான நடவடிக்கை தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 - டிசம்பர் 10 ஆம் திகதி வரையான 16 நாட்கள் பாலின வன்முறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரசாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண் உடலியல் மற்றும் பாலியல் வன்முறையை அவளின் வாழ்நாளில் ஒரு தடவையாவது அனுபவிக்கிறாள். அதிகமாக துணைவரினால் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். அந்தப் பகுதியில் கணிக்கப்பட்ட பெறுமானம், ஐந்தில் இரண்டு பெண்கள் அல்லது கிட்டத்தட்ட 40 வீதத்திற்கு அதிகரித்துள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறையானது பாரதூரமான சுகாதாரப் பாதிப்புக்கள், சேதங்கள் சூழ்ந்து கொள்ளல், அத்துடன் உடலியல், உளவியல், பாலியல் ரீதியான மற்றும் பாலியல் தொற்று நோய்கள், எச்.ஐ.வி, மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பங்கள், மற்றும் உளநல பிரச்சினைகளை கொண்டிருக்கின்றது. 

கொவிட்-19 இன் வெளிப்படுகையும் பரவலும் விஷேடமாக பெண்களையும் சிறுமிகளையும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தை அதிகரித்துள்ளது.

அதிகளவில் அதிகரித்த பொருளாதார மற்றும் மன அழுத்தத்தின் போது அசைவுகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், பெண்களை ஆதரவு வழங்கும் சேவைகளிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி வைத்திருக்கலாம் மற்றும் குற்றவாளிகளுக்கு அண்மையில் வைத்திருக்கும். வாழ்வாதரத்தை இழப்பதனால் பெண்கள் விகிதாசாரமற்ற ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார ரீதியான பாதிப்புக்குள்ளாகும் மற்றும் தங்கியிருக்கும் தன்மையை அதிகரிக்கின்றனர். 

அவசர தொலைத் தொடர்புகள், பாதுகாப்பிடங்கள் மற்றும் சட்டஉதவி போன்ற வன்முறைகளுக்கு பதிலளிக்கும் சமூக பாதுகாப்பு சேவைகள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த மற்றும் பிற ஆதரவு சேவைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவது மட்டுமல்லாமல், விரிவாக்கப்படுவதும் தவிர்க்கப்பட முடியாததாகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில், ஐ.நா.வின் வருடாந்த பிரச்சாரத்தின் தொடக்கத்தை குறிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்படுவதைக் குறிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை பங்குதாரர்களையும் இந்த தீவிரமான பொது சுகாதார பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரு முக்கியபங்கைக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கொவிட்-19 பதில் செயலின் போது புதிய அல்லது உயர்ந்த பாலின-உணர்திறன் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உறுப்பு நாடுகளை பாராட்டுகிறது மற்றும் பல முக்கிய துறைகளில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறது. 

முதலாவதாக, கொள்கை வகுப்பாளர்கள் தப்பிப்பிழைப்பவர்களுக்கான சேவைகள் போதுமாக கிடைக்கப்படுவதையும், அவர்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளின் தொகுப்பில் உள்ளடக்கப்படுவதையும் தொடர்ந்து உறுதிப்படுத்தவேண்டும், அதன் பராமரிப்பிற்கு பிராந்தியம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது.

சமூக இடைவெளிகளை பேணும் நடவடிக்கைகள் செயன் முறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆதரவு சேவைகளைத் தழுவுவதில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக நிகழ்நிலை (ஒன்லைனில்) வழங்குவதன் மூலம் சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களில் 70 வீதம் பெண்கள், தொற்று மற்றும் மன அழுத்தத்திலிருந்து மட்டுமல்லாது களங்கம் மற்றும் வன்முறையிலிருந்தும் பெண்கள் பாதுகாக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, சுகாதார வசதி நிர்வாகிகள் தப்பிப்பிழைப்பவர்களுக்கு உள்நாட்டில் கிடைக்கக் கூடிய சேவைகளைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து புதுப்பித்த நிலையில் இருக்க திறந்திருக்கும் நேரம், தொடர்பு விவரங்கள் மற்றும் இவை தொலைதூரத்தில் வழங்கப்படலாமா மற்றும் பரிந்துரை இணைப்புகளை நிறுவுதல் உள்ளடங்கலான திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 

சுகாதார வழங்குநர்கள், பிரச்சினை மற்றும் அதன் தாக்கங்களை அறிந்தவுடன், மருத்துவ சிகிச்சையையும், அனுதாபத்துடன் செவிமெடுப்பது, தேவைகளைப் பற்றி கேட்பது, மற்றும் உயிர்பிழைத்தவர்களை ஆதரிப்பதற்காக இணைப்பது போன்ற முதல் நிலை ஆதரவையும் வழங்க வேண்டும்.

உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும், மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத ஒரு பாலின-சமமான பிராந்தியத்தைப் பற்றிய எங்கள் பகிரப்பட்ட பார்வையை அடைய பிராந்தியத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment