சமூக இடைவெளியைப் பின்பற்றாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது! - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

சமூக இடைவெளியைப் பின்பற்றாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது!

பேருந்தில் சமூக இடைவெளியை உறுதி செய்யத் தவறிய குற்றச்சாட்டில் பேருந்தொன்றின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து மதுகம வரை இயங்கும் பேருந்தொன்றில் சமூக இடைவெளிப் பின்பற்றப்படவில்லையென பாணந்துர பொலிஸ் நிலையத்தில் பயணிகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேருந்தை சுற்றிவளைத்த பொலிஸார் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதுடன், குறித்த பேருந்தையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்கான காணொலி சான்றுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், குறித்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment