தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தம்புள்ளை மாநகர சபைத் தலைவர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையதில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியானதிலேயே வர்த்தகர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கலேவல - தலகிரியாகம மகா வித்தியாலயத்தையும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment