பல்கலைக்கழக பரீட்சைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பில் கவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

பல்கலைக்கழக பரீட்சைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பில் கவனம்

பல்கலைக்கழக பரீட்சைகளை இணைய (Online) வழியில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் மேற்கொண்டு கற்கைநெறிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் இந்நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment