இங்கிலாந்தில் பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகளை தனியாக வேறொரு இடத்திற்கு பூங்கா நிர்வாகத்தினர் மாற்றியுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளிகள் பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாகவும் மனம் புண்படும்படியாகவும் நடந்து கொண்டதாலும் நிர்வாகத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரியல் பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன.
இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு தெரியவந்துள்ளது.
ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும், மற்றொரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்கும், இன்னொரு கிளி மரியாதை குறைவாக பேசும். மனம் புண்படும் படி கிளிகள் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் இதுவரை முறைப்பாடு அளிக்கவில்லை என்றாலும் நிர்வாகத்தினர் அவற்றை தனியாக வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் குறிப்பாக அனைத்து வகையான சத்தங்களிலிருந்தும் குரல்களைக் கற்றுக் கொள்வதில் திறமையானவை என்று பூங்கா நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment