பொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது ருவிட்டரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாடாளுமன்றத்தின் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கூறி வருகின்றமை உண்மைக்கு புறம்பாகத்தானே உள்ளது?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment