ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதற்தடவையாக சாட்சியமளித்தார் பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதற்தடவையாக சாட்சியமளித்தார் பிள்ளையான்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முதற்தடவையாக சாட்சியமளித்தார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க ஆரம்பித்ததார். அதனை ஊடகங்களில் பகிரங்கப்படுத்த வேண்டாம் எனவும் அவர் நீதிபதிகள் குழாத்திடம் கோரியிருந்தார்.

சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்த பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment