பேருவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் எஸ்.டி.வி குணவர்தன இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நேற்றுமுன்தினம் பொது சுகாதார பரிசோதகர்களால் 81 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 29 பேர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர். அங்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவனும் அதில் உள்ளடங்குகின்றான். குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதற்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய தொற்றாளர்களை பிங்கிரிய சிகிச்சை நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.´
No comments:
Post a Comment