முல்லைத்தீவில் 54 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார் காதர் மஸ்தான் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

முல்லைத்தீவில் 54 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார் காதர் மஸ்தான் எம்.பி.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்கிற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 54 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானால், இந்த நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்ப்பட்டன.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு.சிந்துஜன், பிரதேச சபை உறுப்பினர் திரு.சீலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திரு.பரமதாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஜனாப். நிஜாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள், பயிலுநர்கள் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment