யாழ்ப்பாணத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா - 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

யாழ்ப்பாணத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா - 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

யாழ்.மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது இந்நிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

அதன்படி தற்போது யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்

மேலும் அண்மையில் 26 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்கள் தற்பொழுது முடக்க நிலமைக்கு உள்ளாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன அதேநேரம் அவருடன் தொடர்பு கொண்டவர்களும் இனங்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

யாழ் நகரப் பகுதியில் அவர் சென்று வந்த கடைகள் 4 மூடப்பட்டுள்ளது. அதேபோல அவர் சென்ற உணவகம் சிகை அலங்கார நிலையம் போன்றனவும் மூடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் நடமாட்டங்களை குறைக்கப்பட்டு அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே இரண்டு வாரங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதன் பிற்பாடு வெளியில் செல்லலாம்.

வெளியே போவது மிக ஆபத்தான விடயம் தற்போது வடக்கில் தொற்று அதிகரிப்பதற்கு சில வெளி மாவட்டத்திலிருந்து வருவோரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம்.

அதேபோல் வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும். தற்பொழுது கடைகள் வர்த்தக நிலையங்களை பொறுத்த வரைக்கும் அவர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாக தமது வியாபாரத்தை நிறுத்த வேண்டும் எனவும்” தெரிவித்தார்.

No comments:

Post a Comment