தோற்றுப்போன இனம் என்ற நிலை மாற்றப்பட்டு மக்களாகிய நீங்கள் வெல்ல வேண்டும். அந்த மாற்றம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிகழுமேயானால் மக்களாகிய நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
கிளிநொச்சி, மலையாளபுரம் பிரதேசத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த கால தேர்தல்களில் மக்கள் சுயநலமிகளுக்கு வாக்களித்தமையினால் கட்சிகள் வெற்றி பெற்றனவே தவிர மக்கள் தோல்வியடைந்த உணர்வுகளுடனேயே இருந்து வருகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கெளரவமான வாழ்வியலை ஏற்படுத்தித் தருவதற்கான வேலைத் திட்டமும் அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறிமுறையும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சியில் காணப்படும் விவசாயநிலங்களை பலன் தரும் பூமியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தருவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment