பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 3, 2020

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தால் பிடியாணை ...
சிறைக் கைதிகளுக்கு வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி அநுருத்த சம்பாயோ, நாளையதினம் (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பதில் உத்தியோகப்பற்றற்ற நீதவான் கே.ஜீ. குணசாசவினால் குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், குருணாகலில் வைத்து நேற்று (02) அநுருத்த சம்பாயோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று அவர் நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதும், குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு வசதிகள் மற்றும் உதவிகள் புரிந்தமை தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதோடு, அதில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நான்காமவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment