மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முது நபீன் சென்றிருந்தார்.
இதன்போது குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சினேகபூர்வமாக சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக மன்னார் மாறை மாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகையுடன் கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர் லெம்பட்
No comments:
Post a Comment