பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை ...
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25) அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இரு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்பதோடு, அதனைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, நிர்மாணிக்கப்பட்டது. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

No comments:

Post a Comment