தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பியுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பியுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ...
(எம்.மனோசித்ரா)

தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் விபரங்களை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அந்த கட்சி தனது தேசியப்பட்டியல் விபரத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தது.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதுவரையில் தமது தேசியப்பட்டியல் விபரங்களை வெளியிடவில்லை.

2020 பாராளுமன்றத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை துரிதமாக வெளியிடுவதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டியுள்ளதால் ஆணைக்குழு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment