கைலாசா நாட்டில் மூன்று ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நித்யானந்தா கூறினார்.
ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் முறைப்பாடு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார்.
கைலாசா நாட்டுக்கென தனி வங்கி, கடவுச்சீட்டு என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் நித்யானந்தா.
இதற்கிடையே, கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நேரலையில் தோன்றி பேசிய நித்யானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கெமரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன். சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என சிரித்தவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment