
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இலக்கத்துக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் சேவைக்கான தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை தவிசாளராகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களினால் நியமித்தவர்களை உள்ளடக்கிய 12 உறுப்பினர்களைக் கொண்டதாக தெரிவுக்குழு அமைந்துள்ளது.
அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, மற்றும் எம்.பி.க்களான லக்ஷ்மன் கிரியல்ல, கயந்த கணாதிலக, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், செல்வம் அடைக்கலாதன் ஆகியோர் இத் தெரிவுக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்கல் 2 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment