மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள், ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இனிமேல் தொலைபேசி மூலமாக முற்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆயினும், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைய முகக் கவசம் அணிந்து, தொற்றுநீக்கம் செய்து, சமூக இடைவெளியை பேணி குறித்த வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment